×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனுஷன்னாய்யா நீ.... உன்ன என்ன பண்ணுச்சு! அந்த வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த பயங்கரம்.... நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!!!

லக்னோ அருகே தெரு நாயை கொடூரமாக கொன்று தோலை உரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரப் பிரதேசத்தின் லக்னோ அருகே தெரு நாயை கொடூரமாகக் கொன்று அதன் தோலை உரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகோஹா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நடந்த இந்த செயல், சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியானதைத் தொடர்ந்து கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தெரு நாயை தாக்கி கழுத்தறுத்த கொடூரம்

தகவலின்படி, செவ்வாய்க்கிழமை காலை அந்தப் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த தெரு நாயை முதலில் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் கூர்மையான ஆயுதம் கொண்டு அதன் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன்பின், இறந்த நிலையில் கிடந்த நாயின் அருகே அமர்ந்து அதன் தோலை உரிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ அங்கிருந்த சிலரால் மொபைலில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அய்யோ... பாவம்! மாமியார் மேல ஏறி உட்கார்ந்து கொடூரமாக தாக்கும் மருமகள்! அதை ரசித்து வீடியோ எடுக்கும் குடும்பம்.... அதிர்ச்சி வீடியோ..!!!

காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார்

வீடியோ வெளியாகியதும் கிராம மக்கள் நேரடியாக நிகோஹா காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், இத்தகைய விலங்கு வதை செயல்களில் ஈடுபடுபவர்கள் சமூகத்திற்கே ஆபத்தாக மாறக்கூடும் என்றும் கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மனநல பரிசோதனைக்கு அனுப்ப போலீஸ் முடிவு

இதற்கிடையே, ‘ஆஸ்ரா தி ஹெல்பிங் ஹேண்ட்ஸ் ட்ரஸ்ட்’ அமைப்பின் தலைவர் சாரு காரே, காவல் அதிகாரி அனு குமாரை சந்தித்து சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அந்த நபருக்கு மனநிலை பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் லக்னோ பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: பார்க்கவே அசிங்கமா இருக்கு.... ரயிலில் தூங்கும் பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்! இதெல்லாம் எப்போ தான் ஒழிய போகுது..... அதிர்ச்சி வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lucknow news #தெரு நாய் கொலை #Nigoha #Animal Cruelty #Uttar pradesh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story