தேசத்தின் உண்மையான ரியல் ஹீரோ லெப்டினன்ட் கர்னல் ஜம்வால் காலமானார்! நாடே இரங்கல்...!
தேசத்திற்காக பல போர்களில் பணியாற்றிய லெ.கோ. ஜம்வால் (100) வயது மூப்பில் மரணம். இந்திய ராணுவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த இவர் மறைவு நாடு முழுவதும் இரங்கலை உருவாக்கியது.
இந்திய ராணுவ வரலாற்றில் நூற்றாண்டு கால சேவையால் புகழ் பெற்ற லெப்டினன்ட் கர்னல் ஷரக் தேவ் சிங் ஜம்வால் அவர்களின் மறைவு நாடு முழுவதும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னலமற்ற சேவையால் தேச பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய இவர், தேசிய பெருமைக்குரிய வீரராக போற்றப்பட்டவர்.
அரிய தலைமுறைக்குரிய ராணுவ அதிகாரி
பிரிட்டிஷ் இந்திய ராணுவம் மற்றும் இந்திய ராணுவம் என இரு காலகட்டங்களிலும் பணியாற்றிய மிகக் குறைந்த வீரர்களில் லெ.கோ. ஜம்வால் ஒருவர். 1926 ஆகஸ்ட் 13 அன்று ஜம்முவில் பிறந்த அவர், இரு ராணுவங்களின் உருவாக்க ஆண்டுகளிலும் தன்னுடைய பங்களிப்பை உறுதியாகச் செய்து வந்தார்.
இதையும் படிங்க: ஜனாதிபதி விருது பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.தேவதாஸ் (வயது 88) மரணம்! திரையுலகமே இரங்கல்.!!
இரண்டாம் உலகப் போர் அனுபவம்
1946-ல் 7வது லைட் குதிரைப்படையில் நியமிக்கப்பட்ட அவர், இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டங்களில் தன்னுடைய சேவையைத் தொடங்கினார். பர்மா பிரச்சாரத்தின் தொடக்க நடவடிக்கைகளிலும் பங்கேற்ற அவர், விரைவாக ஒரு துணிச்சலான அதிகாரி என தன்னை நிரூபித்தார்.
தேசத்தின் உண்மையான ஹீரோவின் பிரிவு
நாட்டை காக்க தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த லெப்டினன்ட் கர்னல் ஜம்வாலின் மறைவு பலரையும் உருக்கி விட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் இராணுவ தரப்பிலும் பலர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஒரு நூற்றாண்டு காலம் தேசத்திற்காக சேவையாற்றிய இந்த வீரரின் மறைவு, இந்திய ராணுவ வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் ஒரு பெரும் இழப்பாகும்.