×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள்.! தாறுமாறாக வந்து ஏறிய சரக்கு லாரி.! 13 பேர் பரிதாப பலி.!

குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா என்ற இடத்தில் சாலையோரம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா என்ற இடத்தில் சாலையோரம் தொழிலாளர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது சரக்கு லாரி ஒன்று அந்த வழியாக வந்துள்ளது. அந்த லாரிக்கு எதிரே கரும்புகளை ஏற்றி கொண்டு டிராக்டர் ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த டிராக்டருக்கு வழி விடும்போது சரக்கு லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியது.

அங்கு ஏற்பட்ட அந்த திடீர் விபத்தில் 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story