×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகாராஷ்டிர மாநிலத்தில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு! முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Lockdown continued till april 30

Advertisement

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி  8453 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது. 716 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1761 ஆக உள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்த கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் கொரோனா  கட்டுக்குள் வராத நிலையில்,  ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே  ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். மேலும் ஒரு சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். மேலும் பட இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharasthra #lockdown
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story