×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தூங்கியவரின் நெஞ்சில் யாரோ அமுக்குவதுபோல் ஒரு உணர்வு.! கண்விழித்தபோது அமர்ந்திருந்த அந்த உருவம்.! உடம்பெல்லாம் நடுங்கிப்போச்சு.!

Lion sit on sleeping man near Gujarat

Advertisement

தூங்கி கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் மீது சிங்கம் ஒன்று ஏறி அமர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் அபரம்பரா கிராமத்தை சேர்ந்தவர் விபுல் கேலய்யா. இவர் சம்பவத்தன்று இரவு தனது குடிசை வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது யாரோ திடீரென அவரது நெஞ்சில் பலமாக அமுக்குவதுபோன்று உணர்ந்துள்ளார். உடனே லேசாக கண்விழித்து பார்த்தவருக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துப்போச்சு.

காரணம் அவரது நெஞ்சு பகுதியை அமுக்கியது வேறு யாரும் இல்லை, அந்த வழியாக உனவு தேடிவந்த சிங்கம் ஒன்றுதான் அவரது நெஞ்சின் மீது தன் கால்களை வைத்து அமர்ந்திருந்தது. இதனை பார்த்த விபுல் கேலய்யா சிங்கத்திடம் இருந்து தப்பிக்க தனது முழு பலத்தையும் கொடுத்து சிங்கத்தை கீழே தள்ளியுள்ளார்.

இதனை அடுத்து சிங்கம் அங்கிருந்து பயந்து ஓடியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysterious #lion
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story