×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"கல்லூரியை விட்டு வெளியேறுகிறோம் எங்களை மன்னிக்கவும்" எழுதி வைத்துவிட்டு... தப்பி ஓடிய மாணவிகள்..!!

கல்லூரியை விட்டு வெளியேறுகிறோம் எங்களை மன்னிக்கவும்; எழுதி வைத்துவிட்டு... தப்பி ஓடிய மாணவிகள்..!!

Advertisement

தனியார் கல்லூரி மாணவிகள் விடுதியில் இருந்து மூன்று மாணவிகள் தப்பி ஓட்டம். 

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் விமான நிலைய ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பி.யூ.கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் பெங்களூருவை சேர்ந்த இரண்டு மாணவிகளும், சித்ரதுர்காவை சேர்ந்த ஒரு மாணவியும் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் தோழிகள். இந்நிலையில் அவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் அதிகாலை மூன்று மணியளவில், தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு, விடுதியின் ஜன்னலை உடைத்து அங்கிருந்து தப்பி சென்றனர். 

இதை தொடர்ந்து விடுதியில் அவர்கள் காணாமல் போனதை அறிந்த விடுதி காவலர் அவர்களின் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு ஜன்னல் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர்கள் ஒரு நோட்டில் நாங்கள் கல்லூரியை விட்டு வெளியேறுகிறாம், எங்களை மன்னிக்கவும், என்று எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதை தொடர்ந்து கல்லூரி நிா்வாகத்தினர் இதுகுறித்து கங்கநாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராகளில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர். இதில் அவர்கள் அதிகாலை மூன்று மணியளவில் ரோட்டில் உடைமைகளுடன் நடத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #mangalore #Female students #Private college hostel #Run away #தனியார் கல்லூரி மாணவிகள் #விடுதி #தப்பி ஓட்டம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story