×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டிக்கெட் எடுக்காமல் ஏசி வகுப்பில் ஓசி பயணம்: மிரட்டல் செயலில் இறங்கிய இரயில் பயணிகள்..!

டிக்கெட் எடுக்காமல் ஏசி வகுப்பில் ஓசி பயணம்: மிரட்டல் செயலில் இறங்கிய இரயில் பயணிகள்..!

Advertisement

 

கிழக்கு இரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான கும்பக் இரயில் சேவை, மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா ஹௌரா - உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

அதிவிரைவு இரயில் எண் 12369, திங்கள், புதன், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் இரண்டு மார்க்கத்திலும் தனது பயணத்தை மேற்கொள்கிறது. 26 மணிநேர தொடர் பயணத்தில், கும்பக் அதிவிரைவு இரயில் லக்னோ, பாட்னா, வாரணாசி ஆகிய முக்கிய வழித்தடங்களை இணைத்து பயணிக்கிறது. 

இந்நிலையில், சம்பவத்தன்று அதிவிரைவு இரயிலின் ஏசி வகுப்பில், டிக்கெட் இல்லாத மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகள் பலரும் கூட்டமாக சேர்ந்து பயணித்து இருக்கின்றனர். ஏசி வகுப்பில் இருந்த பயணிகளை மிரட்டி, அவர்களின் இருக்கையை அகப்பரித்து பயணம் தொடர்ந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kumbah Express #Express Train 12369
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story