ஓடும் பேருந்தில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நடத்துனர்..! அதிர்ச்சி வீடியோ.!
KSRTC Bus Conductor Accused Of Misbehaving With A Woman Passenger In Bengaluru
பெங்களூரில் ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் பேருந்தின் நடத்துனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மங்களூரு மாவட்டம் புத்தூரை நோக்கி அரசு பேருந்து ஓன்று பயணித்துள்ளது.
பயணிகளுக்கு பயண சீட்டை கொடுத்துவிட்டு பேருந்தின் நடத்துனர் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவரின் அருகில் வந்து அமர்ந்துள்ளார். நடத்துனர் எதார்தமாகத்தான் அமர்கிறார் என அந்த இளம் பெண்ணும் எதுவும் கண்டுகொள்ளவில்லை.
சிறிதுநேரத்தில் கண்டக்டர் அந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். இதை அந்த பெண் தடுக்க முயற்சித்தும், அதை கண்டுக்கொல்லாமல் அந்த பெண்ணின் கையை தள்ளிவிட்டு, மீண்டும் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார் அந்த நடத்துனர்.
இதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த அந்த இளம் பெண் சிறிது தூரத்தில் பேருந்தை நிறுத்தக்கூறி நடத்துனரிடம் சண்டைபோட்டுள்ளார். ஆனால், தன்மீது எந்த தவறும் இல்லை என நடத்துனர் குற்றசாட்டை மறுக்க, தன்னிடம் இருந்த ஆதாரத்தை காட்டியுள்ளார் அந்த இளம் பெண்.
பின்னர், விவகாரம் பெரிதானத்தை அடுத்து இது தொடர்பாக கர்நாடகா போக்குவரத்து துறை அளித்த புகாரில் சம்பந்தப்பட்ட கண்டக்டர் சிசுஹரி சாலூர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362