×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூமுக்குள் வைத்து பூட்டி.. மருமகளுக்கு அரங்கேறிய கொடுமை! வெளிவந்த அதிர்ச்சி காரணம்!!

ரூமுக்குள் வைத்து பூட்டி.. மருமகளுக்கு அரங்கேறிய கொடுமை! வெளிவந்த அதிர்ச்சி காரணம்!!

Advertisement

கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியில் வசித்து வருபவர் வைஷ்ணவி. அவர் தற்போது பொறியியல் இறுதி ஆண்டு  படித்து வருகிறார். இந்நிலையில் வைஷ்ணவிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வைஷ்ணவி மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அவரது மாமியாருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தகாத உறவு இருந்ததாகவும், அந்த நபர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மருமகள் இதுகுறித்து மாமியாரிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.. இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நபர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வைஷ்ணவி அவரை தடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர் வைஷ்ணவியின் முகத்தில் பலமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முகமெல்லாம் வீங்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவர் வேலைக்கு சென்ற பிறகு எனது மாமியார் என்னை அறையில் வைத்து பூட்டி விடுவார். தண்ணீர் கேட்டால் கூட டாய்லெட் தண்ணீரை குடித்துக்கொள் என கூறுவார் என குற்றம் சாட்டியுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பலரும் வைஷ்ணவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #illegal #mother in law
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story