×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

68 வயது முதியவரை மயக்கி உல்லாசம் அனுபவித்த 28 வயது இளம்பெண்.. கணவன் செய்த பகீர் சம்பவம்..! முதியவர்களே கவனம்.!

68 வயது முதியவரை மயக்கி உல்லாசம் அனுபவித்த 28 வயது இளம்பெண்.. கணவன் செய்த பகீர் சம்பவம்..! முதியவர்களே கவனம்.!

Advertisement

முதியவரை சல்லாப வலையில் வீழ்த்தி உல்ளலாமாக இருந்து வீடியோ எடுத்து ரூ.27 இலட்சம் பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர், குன்னம்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நிஷாந்த். இவரின் மனைவி ரஷிதா (வயது 28). தம்பதிகள் இருவரும் சேர்ந்து சமூக வலைத்தளத்தில் உள்ள தங்களின் கணக்கில் பல கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளனர். இதன் மூலமாக பலரின் நட்பும் கிடைத்துள்ளது.

இவ்வாறான நண்பர்களில் வசதியான முதியவர்களை கண்டறிந்த ரஷிதா, அவர்களுக்கு தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். இவ்வாறாக மலப்புரத்தை சேர்ந்த 68 வயது முதியவருடன் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவருடன் நெருங்கி பழக தொடங்கிய ரஷிதா, தன் வீட்டிற்கு வந்தால் நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வலையை விரித்துள்ளார்.

பேத்தி வயதுள்ள பெண்ணின் பேச்சில் மயங்கிப்போன முதியவர், ரஷிதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் அங்கு உல்லாசமாக இருக்க, சம்பவத்தை நிஷாந்த் வீடியோ எடுத்துள்ளார். பின், தம்பதிகள் இருவரும் முத்ஹியவருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். 

இவ்வாறாக மொத்தம் ரூ.27 இலட்சம் பறிக்கப்பட்ட நிலையில், இருவரும் தொடர்ந்து மிரட்டி வந்ததால் அவர் செய்வதறியாது திகைத்துள்ளார். இதற்கிடையில் அவரின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் குறைவதை அறிந்த உறவினர்கள் கேள்வி எழுப்புகையில் உண்மை அம்பலமாகியுள்ளது. 

இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக மலப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Trissur #India
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story