×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாநில அளவில் திடீர் ஸ்ட்ரைக்.. தனியார் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் பரிதவிப்பு.!

மாநில அளவில் திடீர் ஸ்ட்ரைக்.. தனியார் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் பரிதவிப்பு.!

Advertisement

கேரள மாநிலத்தில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், இன்று முதலாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக கேரள தனியார் பேருந்து சங்க தலைவர் லாரன்ஸ் பாபு தெரிவிக்கையில், 

"கேரள மாநிலத்தில் தனியார் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனை சரி செய்யும் வகையில் மாணவர்களுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்துவது, டீசல் மானியம் வழங்குவது, சாலை வரி தளர்த்துவது உட்பட பல கோரிக்கைகள் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என மாநில அரசு கடந்த நவ. 9 ஆம் தேதி உறுதி அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று முதலாக மாநிலம் முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்படுகிறது. அரசு எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை போராட்டம் நடக்கும்" என்று தெரிவித்தார். 

கேரள மாநிலத்தில் இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு போராட்டம் நடப்பதால், அம்மாநில பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Private bus #strike #Public #Transportation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story