×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கேரளாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை.. சுகாதாரப்பணிகள் தீவிரம்., அலெர்ட்டாகும் அதிகாரிகள்.!

கேரளாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை.. சுகாதாரப்பணிகள் தீவிரம்., அலெர்ட்டாகும் அதிகாரிகள்.!

Advertisement

குரங்கு அம்மை பரவலை கட்டுக்குள் வைக்க மாநில சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாட்டில் பரவி வந்த குரங்கு அம்மை நோயானது கேரளாவிலும் உறுதி செய்யப்பட்டது. வளைகுடாவில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை உறுதியானதை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். 

அதனைப்போல மற்றொருவருக்கு குரங்கு அம்மை உறுதியாகவே, அவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சையில் அனுமதி செய்யப்பட்டார். வளைகுடாவில் இருந்து கடந்த 6-ந்தேதி வருகை தந்தவரின் இரத்த மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கும் குரங்கு அம்மை உறுதியானது.

இதனால் கேரளாவில் மொத்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ள நிலையில், குரங்கு அம்மை பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Monkey Pox #India #tamilnadu #world #Health Ministry
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story