×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடைந்து கிடந்த ஸ்கூட்டர்..! கடற்கரையில் கிடந்த பெண்ணின் சடலம்..! கேரளாவில் நடந்த திக் திக் சம்பவம்..!

Kerala Missing teacher body found on beach

Advertisement

தோழியின் திருமணத்திற்கு சென்றுவிட்டு வருவதாக கூறிய 44 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கசரகோட் மாவட்டத்தை சேர்ந்த ரூபஸ்ரீ என்ற பள்ளி ஆசிரியை ஒருவர் கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்த பிறகு தன்னுடன் வேலைபார்க்கும் ஆசிரியை ஒருவரின் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார்.  திருமணம் முடிந்த பிறகு தனது மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவரை சந்தித்துவிட்டு ரூபஸ்ரீ வீடு திரும்பியுள்ளார்.

ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை. ரூபஸ்ரீயை காணவில்லை என உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விசாரணையை தொடங்கிய போலீசார் ரூபஸ்ரீயின் ஸ்கூட்டர் ஹோஷங்காடி என்னும் பகுதியில் கிடப்பதை கண்டறிந்தனர். ஆனாலும், ரூபஸ்ரீயை பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இளம் பெண் ஒருவரின் சடலம் கடற்கரை ஓரத்தில் கிடப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்களின் உதவியுடன் அது ரூபஸ்ரீயின் சடலம்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். ரூபஸ்ரீ எப்படி இறந்தார்? என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story