தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாலை 5 மணிக்கு மேல் கல்லூரி காதல் ஜோடிகள் பேருந்து நிறுத்தத்தில் அமர தடை; கேரளாவில் சர்ச்சை போஸ்டர்.! காரணம் இதுதானாம்.!

மாலை 5 மணிக்கு மேல் கல்லூரி காதல் ஜோடிகள் பேருந்து நிறுத்தத்தில் அமர தடை; கேரளாவில் சர்ச்சை போஸ்டர்.! காரணம் இதுதானாம்.!

Kerala Malappuram Poster Viral about College Student bus Stop Issue Advertisement

 

கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம், எடவன்னா பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ளூர் மக்கள் சார்பில் போஸ்டர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், "கல்லூரி மாணவர்கள் மாலை நேரத்தில் 5 மணிக்கு மேல் இருக்க கூடாது. குறிப்பாக ஜோடியாக யாரும் பேருந்து நிறுத்தத்தில் இருக்க கூடாது. 

இந்த பகுதியில் குழந்தைகள், குடும்பத்துடன் நாங்கள் வசித்து வருகிறோம். கல்லூரி மாணவர்களின் உரிமையில் தலையிட எங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், உங்களின் செயல்பாடுகள் சர்ச்சைக்குரிய வகையில் இருக்கிறது. 

KERALA

இதனால் இனிவரும் நாட்களில் 5 மணிக்கு மேல் ஜோடியாக கல்லூரி மாணவ-மாணவியர்கள் இருக்க கூடாது. வரும் பேருந்துகளில் அடுத்தடுத்து பயணித்து சென்றுவிட வேண்டும். 

அறிவிப்பை அலட்சியப்படுத்தி பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் மாணவர்கள் பெற்றோரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். உங்களுக்கு அவசியம் இருப்பின் தங்களின் வீடுகளுக்கு அழைத்து சென்று உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். பொதுவெளியில் அவை வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Kerala news #India #college students #Bus Stop
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story