உல்லாசத்தில் வலிப்பு ஏற்பட்டு கைலாசம் போன பெண்.. புதருக்குள் உள்ளாடையை மீட்ட போலீசார்.. நிர்கதியாய் தவிக்கும் 2 குழந்தைகள்..!
உல்லாசத்தில் வலிப்பு ஏற்பட்டு கைலாசம் போன பெண்.. புதருக்குள் உள்ளாடையை மீட்ட போலீசார்.. நிர்கதியாய் தவிக்கும் 2 குழந்தைகள்..!
தனது இளம் காதலரோடு உல்லாசம் அனுபவித்த பெண்மணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட காரணத்தால் இரும்பு கம்பியால் தனக்குத்தானே தலையில் அடித்துக்கொண்டு பலியான சோகம் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம், பாத்திமா கல்லூரி அருகேயுள்ள இரயில்வே கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது, பெண்ணின் சடலம் நிர்வாணமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது கொல்லத்தை சேர்ந்த 32 வயது பெண்மணி என தெரியவந்தது.
இவரின் கணவர் விஜூ கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பலியாகிவிட, உமா தனது 2 குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் லாட்டரி விற்பனை செய்ய தொடங்கினாலும், அதனால் கிடைத்த வருமானம் குடும்பத்திற்கு போதவில்லை. இதனால் அழகு சாதனம் விற்பனை செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே, அவருக்கு 19 வயது இளைஞரான நாசுவுடன் பழக்கம் ஏற்படவே, இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று பாத்திமா கல்லூரி பழைய இரயில்வே கட்டிடத்தில் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, உமாவுக்கு உல்லாசத்தின் போதே திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
அவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த நாசு, உமாவுக்கு வலிப்பை கட்டுப்படுத்த இரும்பு கம்பியை கொடுத்துள்ளார். ஆனால், உமா கம்பியால் தனது தலையில் தாக்கிக்கொண்டதால் இரத்தம் வெளியேறி பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனால் பதறிப்போன நாசு என்ன செய்வதென்று தெரியாமல், உமாவின் துணிகளை அங்கங்கே வீசிவிட்டு செல்போனை பாபநாசம் பட பாணியில் எங்காவது வீச கொண்டு சென்றுள்ளார்.
கடந்த 24ம் தேதி சம்பவத்தில் உமா பலியாகிவிட, 1ம் தேதி புத்தாண்டு இரவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நாசுவிடம் உமாவின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அன்று அவர் சாதுரியதுடன் தப்பி சென்றுவிட்டாலும், காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் பேரில் நாசு கைது செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உமாவின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தந்தையை விபத்தில் இழந்த 2 குழந்தைகள் தாயையும் இழந்து அனாதையாகி தவிப்பது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362