தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலுக்கு இடையூறு... பாட்டியின் கள்ளக்காதலன் பதறவைக்கும் செயல்.. பச்சிளம் பிஞ்சு துடிதுடித்து மரணம்.!

கள்ளக்காதலுக்கு இடையூறு... பாட்டியின் கள்ளக்காதலன் பதறவைக்கும் செயல்.. பச்சிளம் பிஞ்சு துடிதுடித்து மரணம்.!

Kerala Kochi Grand Ma Lover Killed Child Interrupt Enjoy with Grand ma on Hotel Bed Advertisement

விடுதியில் அறையெடுத்து உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடிக்கு இடையூறாக பெண்ணின் பேத்தி இருந்ததால், பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் வசித்து வருபவர் சுஜீஷ். இவரின் மனைவி வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை உள்ளது. சுஜீஸின் தாயார் தீப்தி (வயது 48). இவர் குழந்தையை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், தீப்திக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜான் பினாய் (வயது 27) என்ற வாலிபருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் கள்ளக்காதல் ஜோடி பல நேரங்களில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது. மேலும், விடுதியில் தங்கியிருந்து உல்லாசமாக இருந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தீப்தி - ஜான் பினாய் கள்ளக்காதல் ஜோடி விடுதியில் அறையெடுத்து தங்கி உல்லாசமாக இருந்த நிலையில், தனது பேத்தியையும் தீப்தி அழைத்து சென்றுள்ளார். நேற்று அதிகாலை 2 மணியளவில் சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, கள்ளக்காதல் ஜோடி விடுதியில் இருந்து வெளியேறியுள்ளது. அங்கு இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில், குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

KERALA

இந்த விஷயம் தொடர்பாக மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது உறுதியாகவே, காவல் துறையினர் கள்ளக்காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, இந்த ஜோடி நள்ளிரவில் உல்லாசமாக இருந்த நிலையில், இவர்களின் உல்லாசத்திற்கு குழந்தை இடையூறாக இருந்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த ஜான் குழந்தையை குளியலறை வாளியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து, ஜானை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் தீப்திக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது. கள்ளக்காதல் விவகாரம் பேத்தியின் உயிரை பறித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Kochi #grand ma #baby #death #Affair #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story