×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலன் தன்னுடன் இருக்க ஆசைப்பட்டு, போலி பலாத்கார புகார் கொடுத்த 19 வயது இளம்பெண்..!

காதலன் தன்னுடன் இருக்க ஆசைப்பட்டு, போலி பலாத்கார புகார் கொடுத்த 19 வயது இளம்பெண்..!

Advertisement

 

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண், சம்பவத்தன்று தனது ஆண் நண்பருக்கு போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

அப்போது, "ஆட்டோவில் தான் கடற்கரைக்கு செல்லும்போது, ஆட்டோ ஓட்டுநர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது ஆட்டோவில் ஏறி பயணிக்கும்போதே தான் மயங்கிவிட்டேன். எழுந்து பார்த்தபோது நான் அரைநிர்வாணமாக இருந்தேன்" என கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெண்ணின் நண்பர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வற்புறுத்தவே, பெண்ணும் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி 58 வயது ஆட்டோ ஓட்டுனரையும் கைது செய்தனர். 

அவரிடம் நடந்த விசாரணையில் தான் அப்பாவி என்று கதற, உடனடியாக பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

பரிசோதனையில் ஆட்டோ ஓட்டுநர் நிரபராதி என்பது உறுதியாகவே, பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது காதலர் தன்னை கைவிட்டு செல்லாமல், எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில் பொய் கூறியதாக தெரிவித்துள்ளார். 

இதனைக்கேட்டு அதிருப்தியடைந்த அதிகாரிகள், தங்களின் மனக்குமுறலை கட்டுப்படுத்தி பெண்ணுக்கு கண்டனத்துடன் கூறிய அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கேரளா #KERALA #Crime news #குற்றம் #Kochi #கொச்சி #sexual abuse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story