×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவன் கண்முன்னே லைலாவை அனுபவித்த மந்திரவாதி; 2 பெண்கள் நரபலி விவகாரத்தில் கள்ளக்காதல் திருப்பம்.!

கணவன் கண்முன்னே லைலாவை அனுபவித்த மந்திரவாதி; 2 பெண்கள் நரபலி விவகாரத்தில் கள்ளக்காதல் திருப்பம்.!

Advertisement

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தை சேர்ந்த பெண்மணி, தர்மபுரியை சேர்ந்த பெண்மணி என கேரளாவில் லாட்டரி விற்பனை செய்த 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷபி, பகவத் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். 

இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் லைலாவும், முகமது ஷபியுடன் சேர்ந்து லைலாவின் கணவரான பகவத் சிங்கை கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக லைலா அளித்த வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல் வெளியானது. 

அதாவது, முகமது ஷபி பகவல் சிங்கை செல்வந்தராக மாற்றிவிடுவேன் என உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை நம்பிய பகவல் சிங்கும் முகம்மதுவை முழுவதுமாக நம்பியிருக்கிறார். மந்திரவாதி என்ற விஷயத்தை உபயோகம் செய்துகொண்ட முகமது ஷபி, லைலாவுடன் அவரின் கண்முன்னே உல்லாசமாக இருந்துள்ளார். 

அவரின் செயல்பாடுகள் லைலாவுக்கு பிடித்திருந்ததால், ஒருகட்டத்தில் அவர் மந்திரவாதியுடன் நெருக்கம் காண்பித்து இருக்கிறார். இதனால் இவர்கள் இருவரும் பகவல் சிங்கை நரபலி கொடுக்க காத்திருந்தபோது இவ்வழக்கில் சிக்கி இருக்கின்றனர் என்ற தகவல் அம்பலமாகியுள்ளது. மேலும், அம்மாநிலத்தில் மாயமான 12 பெண்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Human Sacrifice #India #arrest #Enjoy #கேரளா #நரபலி #கள்ளக்காதல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story