ஸ்வேதா டீச்சர் ..! ஒரே நாளில் ஆன் லைன் கிளாஸ் மூலம் பிரபலமான ஸ்வேதா டீச்சர்..! கேரளாவையே அசரவைத்த 1 ஆம் வகுப்பு ஆசிரியை..!
Kerala fame sai swetha teacher
கேரள அரசு விக்டரி என்னும் சேனல் மூலம் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் திட்டத்தை கடந்த 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். குறிப்பாக மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ள நிலையில் பிள்ளைகளுக்கு படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் கிளாஸ்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கேரளா அரசு தொடங்கியுள்ள இந்த ஆன்லைன் கிளாஸ்ன் முதல் நாளிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் டீச்சர் ஸாயி ஸ்வேதா தீலி என்பவர். ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் சொல்லித்தருகிறார் ஸ்வேதா டீச்சர்.
பொதுவாக இவர் பள்ளியில் பாடம் நடத்தும்போது விலங்குகளை வரைந்துகாண்பித்து பாடம் எடுப்பது வழக்கம், ஆனால், தற்போது தொலைக்காட்சி என்பதால் அந்த விலங்குகளின் உணர்வுகளை தனது செய்கை, முகபாவம் மூலம் அப்படியே குழந்தைகளுக்கு கொண்டுவந்தது காண்பிக்கிறார் ஸ்வேதா டீச்சர்.
பூனை போலவே முகத்தை வைத்துக்கொண்டு, கண்களை மூடி திறந்து அவர் கொடுக்கும் எக்ஸ்பிரெஷன்ஸ் பெரியவர்களையும் ரசிக வைக்கிறது. இதன் மூலம் ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளார் ஸ்வேதா டீச்சர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362