×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐயப்ப பக்தர்கள் பேருந்து - ஆட்டோ மோதி பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தினர் 5 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி.!

ஐயப்ப பக்தர்கள் பேருந்து - ஆட்டோ மோதி பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தினர் 5 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி.!

Advertisement

 

கேரளா மாநிலத்தில் உள்ள செட்டியங்காடு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 நபர்கள் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். அப்போது அவ்வழியே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் பேருந்தும் வந்துள்ளது. 

இந்நிலையில் பேருந்து சாலையின் திருப்பத்தில் வேகமாக திரும்பிய போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆட்டோவின் மீது மோதி பயங்கரமாக விபத்திற்குள்ளாகியது. 

இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கிய நிலையில், ஆட்டோவில் பயணம் செய்த அப்துல் மஜீத் என்பவரின் குடும்பத்தினர் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இவர்கள் அங்குள்ள புல்லூர் பகுதியில் திருமணம் ஒன்றுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் அப்துல் மஜீத், முஹ்ஸினா, தஸ்னீம், ரெய்ஸ் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kerala news #Auto Rickshaw Bus Crash #death #கேரளா #விபத்து
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story