×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கார் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. கைக்குழந்தை உட்பட 4 பேர் உடல் நசுங்கி பலியான பரிதாபம்.!

கார் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. கைக்குழந்தை உட்பட 4 பேர் உடல் நசுங்கி பலியான பரிதாபம்.!

Advertisement

கேரளா மாநிலத்தில் உள்ள திருவானந்தபுரம், நெடுமங்காடு பகுதியில் வசித்து வருபவர் சுதீஷ் லால் (வயது 37). இவரின் மனைவி ஷைனி. இவர் சவுதியில் நர்சாக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ஷைனி, இன்று சவூதி செல்லவிருந்துள்ளார். 

இதனையடுத்து, கொச்சி விமான நிலையத்திற்கு சுதீஷ் லால் மற்றும் ஷைனி, அவரின் குடும்பத்தினர் காரில் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது, அதிகாலை நேரத்தில் பால்குளங்கரா தேசிய நெடுஞ்சாலையில் லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடல் நசுங்கி காருக்குள் உயிரிழந்து இருந்த சுதீஷ் லால், ஷைஜி, அபிராக், கைக்குழந்தை ஆகியோரின் உடலை மீட்டனர். 

ஷைனி பலத்த காயத்துடன் உயிர்க்கு போராடிக்கொண்டு இருந்த நிலையில், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Thriuvananthapuram #Kochi #accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story