2 வயது சிறுவன் மீது கார் சக்கரம் ஏறி இறங்கி பரிதாப பலி; அலட்சியமான ஓட்டுநரால் சோகம்.!
2 வயது சிறுவன் மீது கார் சக்கரம் ஏறி இறங்கி பரிதாப பலி; அலட்சியமான ஓட்டுநரால் சோகம்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பீதர் மாவட்டத்தைச் சார்ந்தவர் சதீஷ் படேல். இவரது மனைவி சங்கீதா. தம்பதிகளுக்கு இரண்டு வயதுடைய மகன் இருக்கிறார். சம்பவத்தன்று அங்குள்ள உறவினரின் வீட்டிற்கு தம்பதிகள் தங்களது மகனுடன் வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கடைவீதிக்கு சென்றதாக தெரியவருகிறது. அப்போது அவ்வழியே வந்த எஸ்யூவி கார் ஓட்டுநர் சிறுவன் இருப்பது தெரியாமல் அவரின் மீது வாகனத்தை ஏற்றி இறக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் சிறுவன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுவன் மீது காரை ஏற்றியதை உணர்ந்த ஓட்டுநர், வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். சிறுவனை காணாது தேடிவந்த பெற்றோர் மகன் வீதியில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அவரை மருத்துவமனையில் அனுமதி செய்தபோது, அங்கு மருத்துவர்கள் சிறுவனின் மரணத்தை உறுதி செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டுநர் புளூடூத் பயன்படுத்தி, பேசிக்கொண்டிருந்தவாறு வந்தபோது விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.