×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசு மருத்துவர் ஏரியில் குதித்து தற்கொலை.. கண்ணீர் சோகம்., தாயின் உடலை பார்த்து கதறிய பிஞ்சுகள்.!

அரசு மருத்துவர் ஏரியில் குதித்து தற்கொலை.. கண்ணீர் சோகம்., தாயின் உடலை பார்த்து கதறிய பிஞ்சுகள்.!

Advertisement

ஏரியில் குதித்து அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. தாயின் உடலை பார்த்து குழந்தைகளும், மனைவியின் உடலை பார்த்து கணவனும் கதறியழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம், சாகர் நகரில் வசித்து வருபவர் ஷர்மதா (வயது 36). இவர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். ஷர்மதாவின் கணவர் சுனில். தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சுனில் சாகர் தாலுகாவில் உள்ள பீமனக்கேனே கிராம பஞ்சாயத்து அதிகாரியாக இருக்கிறார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் ஷர்மதா இருசக்கர வாகனத்தில் ஊரின் வெளியே உள்ள ஏரிக்கு சென்ற நிலையில், திடீரென ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வெளியே சென்ற மனைவி வீட்டிற்கு வராததால் பதறிப்போன சுனில், மனைவியை தேடியுள்ளார். அப்போது, பெண்ணொருவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று பார்க்கையில் விஷயம் தெரியவந்துள்ளது. 

ஷர்மிதாவின் உடலை பார்த்து கணவர் சுனில் மற்றும் குழந்தைகள் கதறி அழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர். ஷர்மிதாவின் தற்கொலைக்கு பணி மன அழுத்தம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் விசாரணை நந்து வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #Shivamogga #suicide #Govt Doctor #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story