×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அழுகிய தக்காளியால் முன்விரோதம்.. பெண் வியாபாரி படுகொலை., தந்தை, மகன் வெறிச்செயல்..! 

அழுகிய தக்காளியால் முன்விரோதம்.. பெண் வியாபாரி படுகொலை., தந்தை, மகன் வெறிச்செயல்..! 

Advertisement

பெண் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், தனிப்படை காவல் துறையினர் ஒரு மாதம் கழித்து தந்தை மகனை அதிரடியாக தர்மபுரியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், உதயகிரி கே.என் புரா 6 ஆவது தெருவில் வசித்து வருபவர் சிவராஜ் (வயது 57). இவரின் மகன் கிரீஷ் (வயது 29). இவர்களின் வீட்டருகே சுனிதா என்ற பெண்மணி காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த பிப். 2 ஆம் தேதி சுனிதா அழுகிய தக்காளிகளை எடுத்து சிவராஜின் வீட்டருகே ஓரமாக போட்டுள்ளார். 

இதனைகவனித்த சிவராஜ் மற்றும் அவரின் மகன் கிரீஷ் சுனிதாவிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது, ஆத்திரத்தில் தந்தை - மகன் இருவரும் சுனிதாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சுனிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மகளின் உயிரை காப்பாற்ற முயற்சித்த சுனிதாவின் தாய் பாரதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் குவிந்ததால் தந்தை - மகன் தப்பி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரைம் தேடி வந்தனர். 

தனிப்படை காவல் துறையினர் கடந்த ஒரு மாதமாக சிவராஜ், கிரீஷை தேடி வந்த நிலையில், இவர்கள் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தர்மபுரிக்கு சென்ற காவல் துறையினர் உறவினர் வீட்டில் இருந்த இருவரையும் கைது செய்தனர். இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #woman #killed #father #son #police #India #tamilnadu #Dharmapuri
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story