×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

85 வயதில், 65 வயது மூதாட்டியை காதலித்து கரம்பிடித்த 9 பிள்ளைகளின் தந்தை.. குடும்பத்தினர் முன்னிலையில் நிக்கா..!

85 வயதில், 65 வயது மூதாட்டியை காதலித்து கரம்பிடித்த 9 பிள்ளைகளின் தந்தை.. குடும்பத்தினர் முன்னிலையில் நிக்கா..!

Advertisement

மனைவியை இழந்து தனிமையில் தவித்து வந்தவர், தனியே வசித்து வந்த மூதாட்டியிடம் காதலை தெரிவித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், உதயகிரி கவுசியா நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 85). இவர் இறைச்சிக்கடையை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனைவி குர்ஷித் பேகம். இவர்கள் இருவருக்கும் 9 பிள்ளைகள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. அவர்கள் குடும்பத்துடன் வசித்து வரும் நிழல், முஸ்தபா - குர்ஷித் பேகம் தனியே வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக குர்ஷித் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிடவே, முஸ்தபா முதுமை மற்றும் தனிமையில் வாடி வந்துள்ளார். தனிமையில் இருக்க இயலாமல் தனக்கென துணை தேவை என்று உணர்ந்த முஸ்தபா, அதே பகுதியில் தனியே வசித்து வந்த பாத்திமா பேகம் (வயது 65) என்ற மூதாட்டியை சந்தித்து அவ்வப்போது பேசி வந்துள்ளார். 

இருவரும் நன்றாக பழகி இருந்த நிலையில், "எனக்கு உன்னை பிடித்துள்ளது, நாம் திருமணம் செய்யலாம்" என முஸ்தபா பாத்திமாவிடம் தெரிவித்துள்ளார். காலம்போன கடைசியில் காதல் தேவையா? என பாத்திமா முதலில் கலாய்த்த நிலையில், பின்னாளில் அவரின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். 

திருமணம் செய்ய இருவருக்கும் விருப்பம் இருக்க, முஸ்தபாவின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். முஸ்தபாவின் மகன், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. எளிமையான முறையில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்துகொண்டு, புதுமண தம்பதிகளிடம் ஆசி பெற்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #Mysore #marriage #couple #Aged Couple
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story