×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

9 வயது சிறுமி 4 சிறார்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தால் இந்தியாவே அதிர்ச்சி.!

9 வயது சிறுமி 4 சிறார்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தால் இந்தியாவே அதிர்ச்சி.!

Advertisement

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி மாவட்டத்தில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள 4 சிறார்கள் வசித்து வருகிறார்கள். 

இந்த 4 சிறார்களும் சிறுவயதிலேயே ஆபாச படங்களுக்கு அடிமையாக தெரியவருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக அழைத்து சென்றுள்ளனர். 

சிறுமியை தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று நான்கு சிறார்களும் சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மயங்கி இருக்கிறார். 

மகளை காணாது தேடி வந்த சிறுமியின் தாய், மகள் வீட்டின் மாடிப்பகுதியில் முனங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து மீட்டுள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். 

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து 4 சிறார்களையும் கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #கர்நாடகா #Latest news #Crime news #இந்தியா #Minor girl rape
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story