×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோவில் தரிசனம் முடித்து திரும்பியதும் கோரவிபத்து.. டிடிவாகனம் அரசு பேருந்து மீது மோதி 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி..! 5 பேரின் உயிர் ஊசல்..!! 

கோவில் தரிசனம் முடித்து திரும்பியதும் கோரவிபத்து.. டிடிவாகனம் அரசு பேருந்து மீது மோதி 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி..! 5 பேரின் உயிர் ஊசல்..!! 

Advertisement

சுற்றுலா பயணிகளுடன் வந்த டிடி வாகனம், அரசு பேருந்து மீது மோதியதில் பயங்கரவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம் அரிசி கரே தாலுகாவின் தேசிய நெடுஞ்சாலை 69-இல் அதிகாலை சுற்றுலா பயணிகளுடன் வந்த டிடி வாகனம், அரசு பேருந்து மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. 

இதில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து தர்மஸ்தலா கோவில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கோரவிபத்து ஏற்பட்டுள்ளது. 

மேலும் டிடி வாகனத்தில் இருந்த 16 பேரில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 5 பேர் பலத்த காயங்களுடன் ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹாசன் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #accident #Govt bus #9 death #கர்நாடகா
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story