கோவில் தரிசனம் முடித்து திரும்பியதும் கோரவிபத்து.. டிடிவாகனம் அரசு பேருந்து மீது மோதி 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி..! 5 பேரின் உயிர் ஊசல்..!!
கோவில் தரிசனம் முடித்து திரும்பியதும் கோரவிபத்து.. டிடிவாகனம் அரசு பேருந்து மீது மோதி 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி..! 5 பேரின் உயிர் ஊசல்..!!
சுற்றுலா பயணிகளுடன் வந்த டிடி வாகனம், அரசு பேருந்து மீது மோதியதில் பயங்கரவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம் அரிசி கரே தாலுகாவின் தேசிய நெடுஞ்சாலை 69-இல் அதிகாலை சுற்றுலா பயணிகளுடன் வந்த டிடி வாகனம், அரசு பேருந்து மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து தர்மஸ்தலா கோவில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கோரவிபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் டிடி வாகனத்தில் இருந்த 16 பேரில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 5 பேர் பலத்த காயங்களுடன் ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹாசன் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362