×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து, நூலிழையில் உயிர் தப்பிய பெண்மணி; இரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரியின் துரித செயலால் தப்பிய உயிர்.!

ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து, நூலிழையில் உயிர் தப்பிய பெண்மணி; இரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரியின் துரித செயலால் தப்பிய உயிர்.!

Advertisement

 

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பொக்காரோ இரயில் நிலையத்தில், இரயில்வே காவல் அதிகாரியாக பணியாற்றி வரும் நபர் சுபாஷ் குமார். 

இவர் சம்பவத்தன்று பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அப்போது, இரயில் தனது பயணத்தை தொடங்கி தனது நடைமேடையில் இருந்து நகர்ந்து சென்றது. 

அப்போது ஒரு ஆண், பெண் என 2 பேர் இறுதி நேரத்தில் இரயிலை பிடிக்க வந்துள்ளனர். ஆண் இரயிலில் ஏறிவிட, பெண் ஏறும் முயற்சியில் தோல்வியுற்று கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில், அவரின் பின்னால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சுபாஷ் குமார், சுதாரிப்புடன் விரைந்து செயல்பட்டு பெண் பயணியின் உயிரை காப்பாற்றினார். 

இந்த வீடியோ விழிப்புணர்வுக்காக இரயில்வே பாதுகாப்புத்துறை பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு, ஓடும் இரயிலில் ஏறவோ, இறங்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jharkhand #ஜார்கண்ட் #Latest news #train #இந்தியா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story