×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தகாத உறவு குற்றமில்லை என தீர்ப்புவழங்கிய நீதிபதியின் மனைவிக்கு அதை பார்சல் செய்துள்ளனர்!.

தகாத உறவு குற்றமில்லை என தீர்ப்புவழங்கிய நீதிபதியின் மனைவிக்கு அதை பார்சல் செய்துள்ளனர்!.

Advertisement


திருமணமான பந்தத்தை தாண்டி ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே தகாத உறவு கொண்டால் அது  கிரிமினல் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விழுப்புரத்தில் இந்து முன்னணி மாநில அமைப்பு தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் நிர்வாகிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு மல்லிகைப்பூ மற்றும் அல்வாவை தபால் மூலம் அனுப்பிவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மல்லிகைப்பூ, அல்வாவை பார்சல் செய்து, அதை அனுப்புவதற்காக தபால் நிலையத்துக்குள் சென்றனர். இதை அறிந்த விழுப்புரம் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். பார்சல் அனுப்ப முயன்ற இந்து முன்னணி மாநில அமைப்பு தலைவர் ஆசைத்தம்பி  மற்றும் பல நிர்வாகிகளை கைது செய்தனர். 

இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த பார்சலை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Court order #judge wife #parcel
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story