ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!
JampK-Three-terrorists-killed-in-two-separate-encounters
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைப்பெற்ற துப்பாக்கி சூட்டில் லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தலைவர் உட்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குப்வாரா மாவட்டம் கனிபோரா கிரல்குண்ட் பகுதியில் உள்ள பழத்தோட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து ராணுவத்தினர் அவர்களை சுற்றி வளைத்துள்ளனர். பின் நடைப்பெற்ற நீண்ட நேர துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதேபோல் சோபியான் மாவட்டம் சித்ரகாம் கிராமத்தில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் அப்பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362