×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நள்ளிரவு 1 மணிக்கு ஓடும் ரயிலில் நடந்த கொடுமை! குழந்தைங்க இருக்காங்கன்னு சொல்லியும் கேட்கல.... தகவல் கொடுத்தும் போலீஸ் வரல! வீடியோ வெளியிட்டு கொந்தளித்த பெண் பயணி..!!!

ஜெய்ப்பூர்-ஸ்ரீ கங்காநகர் ரயிலில் மது அருந்திய நபர்கள் பெண் பயணிக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. ரயில்வே போலீசார் தாமதமாக வந்ததாக குற்றச்சாட்டு.

Advertisement

ஜெய்ப்பூரில் இருந்து ஸ்ரீ கங்காநகர் நோக்கிச் சென்ற ரயிலில் நள்ளிரவில் பெண் பயணி ஒருவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஏசி 2-டயர் பெட்டியில் மது அருந்திய சிலர் ஆபாசமாக பேசியதுடன், தட்டிக்கேட்ட பெண்ணின் குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. தகவல் தெரிவிக்கப்பட்டும் போலீசார் நீண்ட நேரம் வரவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் பெட்டியில் மது அருந்தி ரகளை

நள்ளிரவு 1 மணியளவில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, பெட்டியில் இருந்த மூன்று நபர்கள் மது அருந்தியபடி ஆபாசமான வார்த்தைகளைப் பேசியதாக தெரிகிறது. அங்கு குழந்தைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய பெண், அவ்வாறு பேச வேண்டாம் என அவர்களைத் தடுத்துள்ளார். ஆனால், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மது அருந்திய அந்த நபர்கள், புகார் அளித்த பெண்ணின் குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரு நொடி லேட் ஆகியிருந்தாலும் உயிரே போயிருக்கும்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ.

தகவல் கொடுத்தும் போலீசார் வரவில்லை என புகார்

இதையடுத்து பெண் பயணி TTE-யிடம் தகவல் தெரிவித்தார். TTE மூலம் ரயில்வே போலீசாருக்கும் தகவல் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் போலீசார் யாரும் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்ட போதிலும், உடனடியாக யாரும் வராததால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி

ரயிலில் ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக பெண் பயணி வீடியோ ஒன்றை வெளியிட்டு, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். குறிப்பாக, அவசரநிலையில் புகார் அளித்தும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக வராதது குறித்து அவர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே நிர்வாகம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ரயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளின் நடவடிக்கை, புகார் அளிக்கப்பட்ட நேரம் மற்றும் போலீசார் சென்றடைய ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Railway Police நடவடிக்கை தொடர்பான முழுமையான விவரங்கள் விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.

 

இதையும் படிங்க: இனிமேலும் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த மக்கள்! குற்றங்களை செய்ய குற்றவாளிகள் நடுங்க வேண்டும்! பரப்பரப்பு அறிக்கை...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ரயில் பயணி #railway police #பெண்கள் பாதுகாப்பு #Jaipur Sriganganagar Train #ரயில்வே விசாரணை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story