தாஜ் மஹால் பொய்யா.? 'தேஜோ மஹாலயா' என்ற சிவன் கோவில் தானா.?! உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.!
தாஜ் மஹால் பொய்யா.? 'தேஜோ மஹாலயா' என்ற சிவன் கோவில் தானா.?! உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.!
தாஜ் மஹால் உண்மையில் 'தேஜோ மஹாலயா' என்ற சிவன் கோயில்தான் என்றும், பின்னர் அது தாஜ் மஹாலாக மாற்றப்பட்டதாகவும் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மனுதாரர் தனது மனுவில், 'தேஜோ மஹாலயா' என்ற சிவன் கோயிலை கி.பி. 1155-56ஆம் ஆண்டில் ராஜா பரமர்தி தேவ் கட்டியதாகவும், பின்னர் அது தாஜ் மஹாலாக மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING:திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது.! முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு வழக்கில் போலீஸ் அதிரடி.!
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறையிடம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் மூலம் வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்கு தேவையான தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன.
இந்த வழக்கில் இதுவரை எந்தத் தீர்ப்பும் வழங்கப்படவில்லை. தற்போது மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் விளக்கம் மட்டுமே கோரப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணையில் தாக்கல் செய்யப்படும் பதில்களின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவு எடுக்கும்.
இதையும் படிங்க: BREAKING: அதிர்ச்சி... முதல்வர் விஜய்யின் வெற்றி செல்லாது....! சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய அதிரடி நோட்டீஸ்..!!!