×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10 ஆண்டுகளாக ஓட்டுனராக பணிபுரியும் நபருக்கு ஒரே நாளில் 50 கோடி ரூபாய் பரிசு.!

10 ஆண்டுகளாக ஓட்டுனராக பணிபுரியும் நபருக்கு ஒரே நாளில் 50 கோடி ரூபாய் பரிசு.!

Advertisement

துபாயில் நடந்த லாட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்த் நபர் 50 கோடி ரூபாய் பரிசை வென்றுள்ளார்.

லாட்டரி சீட்டு பல இடங்களில் தடை செய்யப்பட்டிருந்தாலும், சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் தான் கேரள நபருக்கு துபாயில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் துபாயில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் புத்தாண்டு காரணமாக, துபாயில் விற்பனையான மெகா லாட்டரி பரிசு சீட்டை வாங்கிய ஹரிதாஸுக்கு முதல்பரிசாக 50 கோடி ரூபாய் மதிப்பில் பரிசு விழுந்துள்ளது. இது குறித்து ஹரிதாஸ் கூறுகையில், இதனை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இதனை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார். 

ஹரிதாஸைத் தொடர்ந்து அஷ்வின் அரவிந்தாக்‌ஷன் என்பவருக்கு இரண்டாவது பரிசான 4 கோடி ரூபாயும், தீபக் ராமசந்த் பாட்டியா என்பவருக்கு மூன்றாவது பரிசான 20 லட்சம் கிடைத்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#driver #Lottery
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story