×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மத்திய அரசு.! உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் மகிழ்ச்சி.!

பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மத்திய அரசு.! உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களது செல்ல பிராணிகளுடன் வர அனுமதி.!

Advertisement

உக்ரைன் மீது ரஷிய படைகள் போர்தொடுத்து 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. போர் தொடர்ந்து உக்கிரம் அடைந்துள்ளதால் இரண்டு நாட்டிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இந்தநிலையில், போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. 

இந்தநிலையில், யுத்த பூமியாக இருக்கும் உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் தங்களது உடமைகளை இழந்தாலும் பரவாயில்லை உயிர் பிழைத்தால் போதும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில், உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களுடன் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளை கொண்டுவர தடையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதனையடுத்து உக்ரைனில் இருந்து இந்தியா வருபவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளையும் உடன் அழைத்து வருகின்றனர். இதற்கு பீட்டா அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ukraine #indians #pets
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story