×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க...?" துபாயில் இருந்து இந்த பெண் வாங்கி வந்த... வைரல் பதிவு.!

என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க...? துபாயில் இருந்து இந்த பெண் வாங்கி வந்த... வைரல் பதிவு.!

Advertisement

துபாயில் இருந்து இந்தியா திரும்பிய பெண் ஒருவர் தனது சூட்கேஸில் எடுத்து வந்த பொருள் அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் சகோதரர் பதிந்துள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி இருக்கிறது 

வட இந்தியாவைச் சேர்ந்த பெண் துபாயில் தனது கணவருடன் வசித்து வருகிறார். தற்போது அங்கு கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் ஊருக்கு திரும்பி இருக்கிறார். துபாயில் இருந்து வரும்போது என்ன வாங்கி வர வேண்டும் என அவரது தாயிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த அந்தப் பெண்மணியின் தாய் 10 கிலோ தக்காளி வாங்கி வா இங்கு ஒரு கிலோ தக்காளி 200 என குறிப்பிட்டுள்ளார். இதனை எடுத்து அந்தப் பெண் 10 கிலோ தக்காளியை  தனது சூட்கேசில் வைத்து துபாயில் இருந்து எடுத்து வந்திருக்கிறார்.

இந்த சம்பவத்தை அந்தப் பெண்ணின் சகோதரர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது . துபாயிலிருந்து நகை, வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை வாங்கி வருவார்கள். ஆனால் 10 கிலோ தக்காளி வாங்கி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறார் இந்த பெண்மணி. தக்காளியின் விலை உயர்வால் அதனை தங்கத்தை போல் வாங்க வேண்டி இருப்பதாக சமூக வலைதள வாசிகள் கமெண்ட் செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Dubai #Tomato #airport #Price Hike
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story