×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆயுதங்களை ஏந்தி பறந்து வந்த ட்ரோன்.! சுட்டு வீழ்த்திய இந்திய படை!

indian force shot Drone

Advertisement

ஜம்மு-காஷ்மீரில் கத்துவா அருகே இன்று அதிகாலை 5.10 மணியளவில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்போது ஆயுதங்களை ஏந்திய ட்ரோன் வானத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. 

இதனை பார்த்து சுதாரித்த இந்திய வீரர்கள், இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் தூரம் பறந்து கொண்டிருந்த அந்த ட்ரோன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ஆயுதங்களை ஏந்திய அந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதிலிருந்து அமெரிக்காவை சார்ந்த M4 ரக துப்பாக்கியும், வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன. இது, ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காக பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட மற்றொரு முயற்சி என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு பகுதிக்கு அருகே கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளிடமிருந்து இதே தயாரிப்பிலான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும், பாகிஸ்தானின் எல்லையிலுள்ள மற்ற பகுதிகளிலும், குறிப்பாக குப்வாரா, ராஜோரி மற்றும் ஜம்மு பகுதிகளிலும் இதேபோன்று ஆயுதங்களைக் கடத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#drone #Pakistan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story