இந்திய எல்லையை மீறிய பாகிஸ்தான் ராணுவம்! ராணுவ வீரர்களின் உடலை மீட்க பாகிஸ்தான் செய்த செயல் - வைரலாகும் வீடியோ!
Indian army pakistan army
காஷ்மீர் ஹாஜிபுரியில் இருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதியை மீறி தாக்குதல் நடத்தியது. உடனே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் கடந்த 10 ஆம் தேதி தாக்குதல் மேற்கொண்டது.
அதாவது கடந்த 10 ஆம் தேதி இரவு முதல் 11 ஆம் தேதி காலை வரை நடைபெற்ற தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய எல்லை பகுதியில் இறந்துள்ளனர்.
அவர்களை மீட்க பாகிஸ்தான் ராணுவம் கையில் வெள்ளை கொடி ஏந்தி வந்து உடலை மீட்டு செல்கின்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.