புல்வாமா தாக்குதலை விட மிக பெரிய தாக்குதல் நடத்த சதி.! சாமர்த்தியமாக முறியடித்த இந்திய ராணுவம்!
Indian army catched dangerous bomb
ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதிக்கு மிக அருகில் உள்ள கரேவா பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 கிலோ வெடிப்பொருட்கள் இந்திய ராணுவத்தால் கண்டறியப்பட்டன. அந்த வெடிப்பொருட்களில், 125 கிராம் எடையுள்ள 416 வெடிபொருள் பாக்கெட்டுகளும், 50 வெடிகுண்டுகளும் இருந்ததாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கபட்டது.
ஜம்மு-காஷ்மீரின் காடிகல் பகுதியில், கரேவா என்ற இடத்தில் சின்டெக்ஸ் டேங் ஒன்று மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததின்பேரில், இந்திய ராணுவத்தினர் அங்கு சோதனை மேற்கொண்டதில், அந்த சின்டெக்ஸ் டேங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 52 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை கைப்பற்றினர்.
வெடிபொருட்களை கைப்பற்றிய பகுதியானது, கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியிருந்து இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு 35 கிலோ எடை கொண்ட ஆர்.டி.எக்ஸ் வகை வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. தற்போது, அந்த பகுதி அருகே 52 கிலோ வெடிபொருட்களை கைப்பற்றி, மற்றொரு புல்வாமா தாக்குதலை நடத்த விடாமல், இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362