×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5 வயது சிறுமி உடலை பல பாகமாக துண்டித்து கொடூர கொலை; தந்தை வெறிச்செயல்.. அதிரவைக்கும் காரணம்.!

5 வயது சிறுமி உடலை பல பாகமாக துண்டித்து கொடூர கொலை; தந்தை வெறிச்செயல்.. அதிரவைக்கும் காரணம்.!

Advertisement


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் மோகித் மிஸ்ரா (வயது 40). இவரின் மகள் தானி (வயது 5). மோகித் மிஸ்ரா தனது மகள் மாயமானதாக, கடந்த பிப்.25 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுமியை அதிகாரிகள் தேடி வந்த நிலையில், சிறுமியின் உடல் பாகம் துண்டு துண்டாக வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்ட்டது. 

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சிறுமியின் தந்தையே மகளை கொலை செய்தது தெரியவந்தது. அதாவது, மோகித்தின் குடும்பத்தினர், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமு என்பவரின் குடும்பத்தினர் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

சிறுமி கொடூர கொலை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தகராறில், இரண்டு குடும்பத்தினரும் பேசாமல் இருந்துள்ளனர். மோகித் தனது மகள் தானியிடம், ராமுவின் வீட்டிற்கு செல்ல கூடாது என பலமுறை கண்டித்து இருக்கிறார். சிறுமி அதனை ஏற்றுக்கொள்ளாமல் குறும்புத்தனத்துடன் செயல்படுத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: ஓரினசேர்க்கை பெண்ணுடன் திருமணம் செய்யமாட்டேன் - இறுதி நேரத்தில் அம்பலமான உண்மை.. மணமகன் ஷாக்.!

இதனால் ஆத்திரமடைந்த மோகித் தனது மகளை ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூர கொலை செய்துள்ளார். பின் உடலை தனித்தனியே துண்டாக வெட்டி வயலில் வீசி வழக்கை திசை திருப்ப முற்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் உண்மையை அறிந்த அதிகாரிகள், மோகித்தை கைது செய்தனர். 

இதையும் படிங்க: பதறவைக்கும் காட்சிகள்.. சேர்க்கைக்கு முறுக்கிய மாடு.. முதியவர் நெஞ்சில் ஏறிபாய்ந்து ஓட்டம்... பரிதாபம் மரணம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #India #Crime #father daughter #உத்திரபிரதேசம் #குற்றம் #தந்தை #கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story