தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பலூன் ஊதியபோது விபரீதம்: வெடித்து தொண்டையில் சிக்கி 13 வயது சிறுவன் பலி.. பெற்றோர்களே கவனம்.!

பலூன் ஊதியபோது விபரீதம்: வெடித்து தொண்டையில் சிக்கி 13 வயது சிறுவன் பலி.. பெற்றோர்களே கவனம்.!

in Karnataka Uttara Kannada Boy Dies Balloon Stuck into Throat  Advertisement

 

சிறார்களிடம் பலூனை ஊத அனுமதி கொடுப்பது எப்படியான சோகத்தை விளைவிக்கும் என்பதற்கு உதாரணமாக சோகம் ஒன்று நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்திர கன்னடா மாவட்டம், ஜலியால் தாலுகா, ஜோகனகொப்பா கிராமத்தில் நாராயண பெல்காம்வகர். இவரின் மகன் நவீன் நாராயணன் (வயது 13). 

இதையும் படிங்க: டயர் வெடித்து சோகம்.. 40 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்த லாரி.. ஓட்டுநர் பலி.!

சிறுவன் அங்குள்ள அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் வீட்டில் இருந்துள்ளார். 

சுவாச பாதையில் சிக்கிக்கொண்டது

அப்போது, பலூனை ஊதி விளையாண்டுகொண்டு இருந்ததாக தெரிய வருகிறது. அச்சமயம், பலூன் திடீரென வெடித்து சிதறிய நிலையில், அது சிறுவனின் சுவாச பாதையில் சிக்கிக் கொண்டுள்ளது. 

Child death

சிறுவன் மரணம்

இதனால் மூச்சு திணறலால் அவதிப்பட்ட சிறுவனை, உடனடியாக மீட்ட பெற்றோர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டிருந்த சிறுவன், மூச்சுச்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "புள்ள ஒரு வாய் சோறு தான் கேட்டுச்சு.." 6 வயது மகனை அடித்து கொன்ற தந்தை.!! கொடூர சம்பவம்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Child death #karnataka #Uttara Kannada #Balloon #தொண்டையில் சிக்கி பலி. #பலூன்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story