×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவே அதிர்ச்சி..! நண்பனில் தொடங்கி, உதவி செய்ய வந்தவன் வரை.. 17 வயது சிறுமியை ஒரு வாரமாக வேட்டையாடிய 10 பேர் கும்பல்..!

நண்பனில் தொடங்கி, உதவி செய்ய வந்தவன் வரை.. 17 வயது சிறுமியை ஒரு வாரமாக வேட்டையாடிய 10 பேர் கும்பல்..!

Advertisement

 

ஒரே மாநிலத்தை சேர்ந்தவர் என்ற பழக்கத்தை நம்பி, நண்பருடன் கடற்கரைக்கு சென்ற சிறுமி ஒரு வாரத்தில் 10 க்கும் மேற்பட்ட காம கொடூரர்களால் சீரழிக்கப்பட்ட அதிர்ச்சி பின்னணியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. பெண்கள் இக்காலத்தில் எவ்வாறான விழிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். 

ஒடிஷா மாநிலத்தில் உள்ள ஜார்கண்ட் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த டிசம்பர் 16ம் தேதி சிறுமி தனது நண்பர் இம்ரான் என்பவருடன் பிறந்தநாள் கொண்டாட, அங்குள்ள ஆர்.கே கடற்கரைக்கு சென்றுள்ளார். இவர்களுடன் இம்ரானின் நண்பர் சோயப் என்பவரும் வருகை தந்துள்ளார். 

கடற்கரையில் வைத்து தனிமையான பகுதியில் சிறுமி யாரை நம்பி சென்றாரோ, அவராலேயே பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடன் வந்த சோயப்-பும் பலாத்காரத்தை அரங்கேற்றி இருக்கிறார். பின்னர் மறுநாள் காலையில் சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு கொண்டு சென்று இறக்கிவிட்டுள்ளனர். மனதளவில் உடைந்துபோன சிறுமி, மீண்டும் அதே கடற்கரைக்கு சென்று தற்கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். 

அவரை காப்பாற்றிய போட்டோகிராபர்கள் ராஜு, ஹரிஷ், நாகேந்திரன் மற்றும் கோபி ஆகியோர் பேச்சுக்கொடுத்து இருக்கின்றனர். பெண் தனக்கு நடந்த கொடுமையை கூற, அவருக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய முன்வராத கும்பல், தங்கள் இருக்கிறோம் என நம்பிக்கையாக பேசி அழைத்துச்சென்று விடுதியில் பலவந்தமாக கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. 

இவர்களை தொடர்ந்து ரீனு, அசோக், நரேஷ், தம்பே, ஈஸ்வர் மற்றும் பிரவீன் ஆகியோரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வாரத்தில் அடுத்தடுத்து சிறுமியை தினமும் பலாத்காரம் செய்துள்ளனர். இறுதியாக ஜார்கண்ட் மாநிலத்திற்கு சிறுமியை அழைத்துச்சென்று விட்ட கும்பல், ரூ.200 பணத்தை கையில் கொடுத்து தப்பி சென்றது. 

தனது சொந்த ஊர் சென்ற சிறுமி, காவல் துறையினரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுமி தனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்பதால், அவர்களின் சார்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்துள்ளது. மனதளவில் உடைந்துபோன சிறுமி, டிசம்பர் 31 அன்று தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு சென்று விபரத்தை கூறிய அதிகாரிகள், அங்கிருந்து ஆந்திரா வந்து தங்களின் புகாரை பதிவு செய்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணைக்கு பின்னரே மேற்கூறிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் சிறுமி வெவ்வேறு முறை விடுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Andhra Pradesh #gang rape #Visakhapatnam Rape
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story