×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசைக்கு இணங்காத கள்ளக் காதலியின் தலையில் கல்லை போட்டு கொடூரக் கொலை!

ஆசைக்கு இணங்காத கள்ளக் காதலியின் தலையில் கல்லை போட்டு கொடூரக் கொலை!

Advertisement

கர்நாடக மாநிலம் ரைச்சூர் மாவட்டத்தில் உள்ள யாரடோனா கிராமத்தை சேர்ந்தவர் கிரிஜம்மா. இவருக்கு தனது தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே அது கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து கிரிஜம்மாவும், தேவராஜன் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு கிரிஜம்மா வீட்டிற்கு தேவராஜ் வந்துள்ளார்.

அப்போது தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள அழைத்துள்ளார். ஆனால், கிரிஜம்மா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், கிரிஜம்மாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த கிரிஜம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ள தேவராஜை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #illegal affair #Raichur #Crime #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story