#Breaking: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022.. 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.!
#Breaking: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022.. 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2022 தொடர், நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டி இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்றது.
நியூசிலாந்து நாட்டில் உள்ள பே ஓவல், மவுண்ட் மவுனகானுயி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணி போட்டியில், சுமார் 107 வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா அமோக வெற்றி அடைந்தது.
இந்திய அணி வீராங்கனைகள் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் அடித்திருந்த நிலையில், 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
ஆட்டத்தின் முடிவில் 43 ஆவது ஓவரிலேயே தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி, 137 ரன்கள் அடித்து தோல்வியை தழுவியது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய பூஜா 67 ரன்களும், ராணா 53 ரன்களும், ஸ்மித்ரி 52 ரன்களும் அதிகபட்சமாக அடித்திருந்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362