×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மருத்துவர் கொலைவழக்கில் சுட்டுகொல்லப்பட்ட குற்றவாளியின் 17வயது கர்ப்பிணி மனைவி கண்ணீருடன் விடுத்த கோரிக்கை!

hydrabad encounter accust wife request to police

Advertisement

கடந்த வாரம் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் லாரி டிரைவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் பெட்ரோல் ஊற்றி கொடூரமாக எரித்தும்  கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, நவீன் மற்றும் சிறுவர்களான ஷிவா, சின்ன கேசவலு  ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர்.இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு பல தரப்பினரும் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டுமென குரல்கள் ஓங்கி வந்தது. இந்நிலையில் நேற்று காலை 4குற்றவாளிகளும் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் என அனைவரும் போலீசாருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த சின்னகேசவலுவின் 17 வயது கர்ப்பிணி மனைவி ரேணுகா, என் கணவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது, என்னையும் அவரை கொலை செய்த இடத்துக்கு அழைத்து சென்று கொன்று விடுங்கள் என கதறியுள்ளார். 

மேலும் குற்றவாளிகள் 4  உடல்களையும் ஒன்றாக தகனம் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில், உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தங்கள் விவசாய நிலத்தில் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து  சின்னகேசவலுவின் மனைவி ரேணுகா, தாய் ஜெயம்மா மற்றும் உறவினர்கள் சாலையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#hydrabad issue #Encounter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story