×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆபிஸ் போகும் அம்மாவிடம் மகன் கேட்ட உதவி.... ஆனால் லேட்டா வீட்டுக்கு வந்த தாய்க்கு ஷாக் கொடுத்த மகன்! ஒரே கேள்வியில் கலங்கிய தாய்.... வேதனையோடு வீடியோ வெளியிட்ட பெண்..!!!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த லாவண்யா வதனம் பகிர்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. வேலைக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான சமநிலை குறித்து அவர் கூறிய கருத்துக்கு பாராட்டு குவிகிறது.

Advertisement

வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையே சமநிலையை பேணுவது இன்றைய பெற்றோருக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. அந்த உண்மையை வெளிப்படுத்தும் வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த லாவண்யா வதனம் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு தாயாக அவர் எதிர்கொண்ட அனுபவம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

மகனின் வேண்டுகோள் நிறைவேறாத தருணம்

லாவண்யாவின் பள்ளி செல்லும் மகன், தனது நண்பரின் பிறந்தநாளுக்காக வாழ்த்து அட்டை தயாரிக்க உதவுமாறு மாலையில் சீக்கிரம் வீட்டிற்கு வரும்படி கேட்டிருந்தான். அதற்காக அவர் வாக்குறுதியும் அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட கூடுதல் பணிச்சுமை காரணமாக, திட்டமிட்ட நேரத்தில் வீட்டிற்கு திரும்ப முடியவில்லை. இதனால் மகனின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனது.

இதையும் படிங்க: ஐயோ.... எனக்கு ஒரு நிமிஷம் கூட நிம்மதி இல்லை! குழந்தை வளர்ப்பதில் உள்ள சிரமம் குறித்து குளியலறையில் உட்கார்த்து கதறி கண்ணீர் விட்டு அழும் தாயின் வீடியோ !!!

ஒரே கேள்வியில் கலங்கிய தாய்

தாமதமாக வீட்டிற்கு வந்தபோது மகன் சோகமாக அமர்ந்திருந்ததை பார்த்த லாவண்யா காரணம் கேட்டுள்ளார். அப்போது, “அம்மா, உனக்கு நான் முக்கியமா? இல்லை உன் ஆபீஸ் முக்கியமா?” என்று சிறுவன் கேட்ட கேள்வி அவரை அதிர்ச்சியடையச் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, “எப்போதும் நீதான் முக்கியம்” என்று மகனை சமாதானப்படுத்திய அவர், அதன்பின் இரவு நேரத்தில் அவனருகில் அமர்ந்து நடந்த சூழலை பொறுமையாக விளக்கியுள்ளார். தனது அலுவலகப் பொறுப்புகள் என்ன, ஏன் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்பதை குழந்தைக்கு புரியும் வகையில் எடுத்துரைத்ததாக கூறியுள்ளார்.

பெற்றோருக்கு லாவண்யா கூறிய அறிவுரை

இந்த அனுபவத்தை பகிர்ந்த லாவண்யா, வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் திறந்த மனதுடன் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பெற்றோரின் பணிச்சூழல், பொறுப்புகள் மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் குறித்து குழந்தைகளுக்கு புரியும் வகையில் விளக்கினால், அவர்கள் தவறான புரிதல்களுக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையிலான உரையாடலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நவீன குடும்ப வாழ்க்கையில் எதிர்கொள்ளப்படும் உண்மையான சவாலை இது வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: சீறிக்கொண்டு வீட்டிற்குள் வந்த பசு! பயத்தில் பிஞ்சு குழந்தையை தவிக்கவிட்டு...உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்ட தாய்! அடுத்து நடந்தது என்ன? திக் திக் காட்சி!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hyderabad Mom #லாவண்யா வதனம் #Working Parents #குழந்தை வளர்ப்பு #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story