உண்மையை சொல்லி நன்மைக்காக போராடுனது ஒரு தப்பா...மருந்து நிறுவனங்களின் மிரட்டல்! ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் சிவராஞ்சனி ராஜினாமா..!!
ஹைதராபாத் குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், போலி ORS விவகாரம் குறித்து ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய பின்னர் IAP-இல் இருந்து விலகினார்.
ஹைதராபாதைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ் திடீரென தனது பதவியை விலக்கிக் கொண்டது மருத்துவத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில ORS தயாரிப்புகள் தரமற்றவை என அவர் வெளியிட்ட தகவலே இந்த முடிவுக்கு பின்னணி என கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பேசப்படுகிறது.
போலி ORS குறித்து மருத்துவர் வெளிப்பாடு
சந்தையில் விற்பனை செய்யப்படும் சில ORS தயாரிப்புகள் போலியானவை மற்றும் தரமற்றவை என சிவராஞ்சனி சந்தோஷ் ஆதாரங்களுடன் வெளியிட்டார். குழந்தைகளின் உடல்நலத்திற்கு இது பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை பயன்படுத்தும்போது எச்சரிக்கை அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த தகவல் வெளிவந்ததும் மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது.
மருந்து நிறுவனங்களின் சட்ட நடவடிக்கை
இதையடுத்து சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள், மருத்துவருக்கு சட்ட ரீதியான நோட்டீஸ்களை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனால் அவருக்கு அழுத்தம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஒரு மருத்துவராக உண்மையை வெளிப்படுத்தியதற்காக இப்படியான நிலை ஏற்பட்டது என அவர் வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடே அதிர்ச்சி....பெண்களை முறைகேடாக வேட்டையாடும் பயங்கரவாதிகள்! பாகிஸ்தான் மதகுருவின் பகிரங்க வாக்குமூலத்தால் அம்பலமான பகீர் உண்மைகள்!!!
IAP மீது குற்றச்சாட்டு
இந்த சூழலில், மருத்துவர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய IAP அமைப்பு தன்னுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஏமாற்றமே அவரது ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த விவகாரம் மருத்துவத் துறையிலும் பொதுமக்களிடையிலும் போலி மருந்துகள் குறித்த விழிப்புணர்வை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் முரண்பட்ட தகவல்கள்..... அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்..!!!