மனைவியின் 16 வயது தங்கையை கர்பமாக்கிய கணவன்!. குழந்தை பிறந்ததால் மனைவி அதிர்ச்சி!.
மனைவியின் 16 வயது தங்கையை கர்பமாக்கிய கணவன்!. குழந்தை பிறந்ததால் மனைவி அதிர்ச்சி!.
மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தில் மனைவியின் தங்கையை கடத்தி கர்பமாக்கிய கிரண் என்ற வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கிரண் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியின் 16 வயது தங்கையை கடத்திச்சென்றுள்ளார். காவல்துறையினர் இருவரையும் தேடிவந்த நிலையில், கிரண் அகிரே தானேயில் ஒரு பஸ் நிறுத்தத்தில் தனது மனைவியின் தங்கையுடன் நின்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். அப்போது அந்த பெண்ணின் கையில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர் விசாரணையில் கிரண் தனது மனைவியின் தங்கையை கடத்தி கற்பழித்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பெண் கர்பமடைந்து கடந்த ஆண்டு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. மேலும் அவர்கள் இருவரும் நாசிக் பகுதியில் கணவன், மனைவி போல் வசித்து வந்தது தெரியவந்தது, மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362