×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படியும் கொடூரமான மனுசங்களா!! எந்த பெண்ணுக்கும் இப்படியொரு நிலைமை வரக்கூடாது! கணவர் குடும்பத்தார் செய்த மோசமான கொடூரம்!!

வரதட்சணை கேட்டு கணவர், மாமியார் மற்றும் நாத்தனாரால் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கவைக்கப்பட

Advertisement

வரதட்சணை கேட்டு கணவர், மாமியார் மற்றும் நாத்தனாரால் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கவைக்கப்பட்ட பெண்  மருத்துவமனையில் உயிரிழந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் சசி ஜாதவ். இவரது கணவர் வீரேந்திர ஜாதவ். சசி யாதவை அவரது கணவர் குடும்பத்தார்கள் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி அவரது கணவர் வீரேந்திர ஜாதவ் சசி யாதவ்வை அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று மூன்று லட்சம் பணம் வாங்கி வர சொல்லியுள்ளார். ஆனால் அவர் எனது பெற்றோரால் இதற்கு மேல் வரதட்சணை கொடுக்க முடியாது என கணவரிடம் வாதாடியுள்ளார்.

இந்நிலையில் கோபமடைந்த வீரேந்திர யாதவ், அப்படியென்றால் நீ உயிருடன் இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை எனக்கூறி மனைவியிடம் ஆசிட் கொடுத்து குடிக்க கூறியுள்ளாராம். அவர் மறுத்த நிலையில் அவரது மாமியாரும், நாத்தனாரும் கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக அவரை ஆசிட்டை குடிக்க வைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பெரும் அவதிப்பட்டு அப்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  50 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அந்த பெண் இறப்பதற்கு முன்பு "என் மரணத்திற்கு காரணமான யாரையும் விட்டு விடாதீர்கள்’’ என போலீசாருக்கு வேண்டுகோள்  விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dowry #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story