×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அழகான மனைவி..! அசந்து தூங்கிய நேரத்தில் கணவன் செய்த காரியம்..! வெளியான பகீர் காரணம்.!

Husband cut wife hair while sleeping

Advertisement

மனைவி தன்னை விட அழகாக இருப்பதாலும், அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தாலும் கணவரே மனைவியின் தலைமுடியை வெட்டி, ரூமில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்தவர் ஆரிப். இவரது மனைவி ரோஷினி. இருவருக்கும் திருமணம் முடிந்து சில வருடங்கள் ஆன நிலையில் மனைவிக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக சந்தேகித்து ஆரிப் அடிக்கடி சண்டை போட்டுவந்துள்ளார். மேலும், மனைவி ஒருநாள் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது தலை முடியையும் வெட்டியுள்ளார்.

மேலும், அவரை ஒரு அறையில் வைத்து பூட்டி, வெளியே எங்கும் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். இந்நிலையில் தனது நண்பர்கள் சிலரின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்த ரோஷினி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story