×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவன் மனைவிக்கு இடையே தகராறு.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல்.!

கணவன் மனைவிக்கு இடையே தகராறு.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல்.!

Advertisement

கேரளாவில் குடும்பத் தகராறில் மனைவியை 11 முறை கத்தியால் குத்தி கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள செங்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிவன் குட்டி. இவரது மனைவி ராதா. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அதன்படி நேற்று இரவும் வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சிவன் குட்டி வீட்டில் காய்கறி நறுக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்து மனைவி ராதாவை 11 முறை கொடூரமாக குத்தியுள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் கத்திய ராதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே ராதா வலி தாங்க முடியாமல் உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவன் குட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#House fight #husband and wife #Crime #death #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story